Saturday 7 September 2013

வாழ்க்கையின் தத்துவம்

- குறைந்தபட்ச சுதந்திரம் என்பது தேநீர் பருகும் நேரத்திலாவது இடையூறுகள் இல்லாமல் இருப்பது !

- தயக்கமில்லாமல் செலவளிக்கிறீர்களென்றால் அது உழைத்துச் சம்பாதித்த பணமாக இருக்க வாய்ப்பில்லை !

- பிடிக்காதவர்களின் பக்கம் நியாயம் இருக்கக்கூடுமென்று கூட யோசிக்க முடிவதில்லை !

- யாரும் பார்க்காவிட்டாலும் கண்ணாடி எதையாவது காட்டிக்கொண்டே தான் இருக்கிறது !

- சிலர் சொல்லும் பொய்யை விட அதில் பிரதிபலிக்கும் உதாசீனம் தான் வலிக்கிறது !

-சி லர் பொய் சொல்வதற்கெனவே பிறந்திருக்கிறார்கள், சிலர் அதை கேட்டு ஏமாறவே வாழ்கிறார்கள் !

- நாம் எப்பொழுதோ செய்த நல்ல செயல்களின் பலன், எதிர்பாராத நேரத்தில் கிடைப்பதற்கு பெயர் தான் அதிருஷ்டமா?

- மரத்தை காப்பாற்ற வேர்கள் எதற்கு !
தப்பிச் செல்ல கால்களை அல்லவா படைத்திருக்க வேண்டும்..!

- 'யார்ட்டயும் சொல்லிடாதே'னு நம்மால 50 பேர்ட்ட சொல்லமுடிஞ்சா
அது பேருதான் ரகசியம்.!

- வாழ்ந்தே பார்க்கவில்லை என்னும் வருத்தம், மரணம் வரையும் இருக்கும் !
நன்றி

No comments:

Post a Comment